கடந்து வந்த பாதைகள்

அனைவரிடமும்
ஏளன பேச்சுக்கு ஆளாகி!!!
ஆண்டவனே கதி
என்றும் அல்லல்பட்டு!!
இன்ப வார்த்தைகள்
பேச ஆளின்றி!!
ஈன பிறவியாய்
நானிருந்தேன்!!
உடன் பிறப்புக்கள்
உதவவில்லை!!
ஊரிலுள்ளோர்
உதவினார்!!!
என்னை நானே
புரிந்து கொண்டேன்!!!
ஏற்றமும் கண்டேன்
என் வாழ்க்கையில்!!!
ஐந்து ரூபாய்கூட
கையில் இல்லை அப்போது!!
ஒரு ஊருக்கே
உணவளிக்க முடியும் இப்போது!!!
ஓடி வந்து பிடிக்க வில்லை!
நிதானமாய் நின்று பிடித்தேன்!!!
அஃதே நம் வழி!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (18-Sep-17, 3:08 pm)
பார்வை : 127

மேலே