உடல்-உயிர் உறவு

உடலைத்தேடி புகுந்திடும் உயிர்
எந்த உடல் அதற்க்கு தெரியாது
ஊழ் வினை வந்துருத்த ,
'அவன்' வகுத்த உடலுக்குள் புகுந்திடும் உயிர்
கண்ணுக்கு தெரியாத உயிர்
பிறப்பால் வரவு , மறைவால் செலவு
பிறப்பும்,இறப்பும் காணும் உடல்
உயிர் இல்லையேல் வெறும் ஜடமே
இயற்கை முடிவிலா உயிர்க்கு
மீண்டும் பிறக்க 'உடல்' கிடைக்காமல்
அலைந்திடும் போது கண்ணுக்கு தெரிவதில்லை
கண்ணுக்கு புலனாகா ஊசலாடும் உயிர் பிசாசம்
உயிர் என்பது ஒன்றே ஆயின் அது
;அவன்;வகுக்கும் உடலில் புகுந்திட
மனிதன்,மிருகம்,புழு,பூச்சி
மரம்,செடி, என்றெல்லாம் பெயர் பெரும்
அதனால்தான் எல்லா உயிரையும்
அன்புடன் நடத்த வேண்டும் ;
பிள்ளைகளே இதை மனதில் கொள்ளுங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Sep-17, 1:19 pm)
பார்வை : 148

மேலே