உணர்வாயா

அன்பே
நிகழ்கால வாழ்வில்
நிழலாக என் முன்னே
நீ நடமாடும் போது
நிலையாக நிற்கும் என்னுள்
தோன்றும் நிலநடுக்கத்தினை
நீ அறிய முடியுமா?!
இல்லை
நீ நினைத்தால் அதனை
நிறுத்தமுடியுமா?!,

யாரையும் கேட்காமல்
துடிக்கும் என் இதயம்
எதற்காக உன்னை காணும் நேரங்களில்
தவிக்கின்றது?,

வழியின் பாதையில்
நீ நடந்து செல்லும் போதும்
என் விழியெல்லாம்
உன்னை காணும் போதும்
உன் இமைகளால்
மறைப்பாயா?
இல்லை
பார்வையைக் கண்டு தவிப்பாயா?!,

உறவும் பிரிவும்
சமநீதியாக இருக்கும் உலகில்
உரிமையின்றி
உறவாட உருகி தவிக்கும் என்னை
உதரி செல்வாயா?!
இல்லை
உன் உள்ளத்தை கொடுத்து
உதவி செய்வாயா?!,


உன் உள்ளம் என்ற ஒன்று
இதுவரை என்னிடம்
சேரவில்லை!
உன்னை தவிர வேறுயாரையும்
என் இதயம் தேடவில்லை!
தினம் தினம்
தீயாக எரிந்து அணையும்
என் அன்பு
தவிக்கின்றதடி
நீ
அழைக்க மாட்டாயா என்று!,

அன்பை காட்ட வரும்
வேளைகளில் எல்லாம்
அவமானம் படும்
என் ஆண்மையின் நிலையை
நீ
நினைத்துப் பார்பாயா?
இல்லை
நீ யார் என்று எதிர்ப்பாயா?,

மல்லிகை கொடியில்
பூர்த்த மலரும்
உன் மனக்கொடியில்
குடியேர என்னும்
என் மனமும்
அதிகாலையில் உன்னிடம்
வாழ்வதும்
அந்தி மாலையில் வாடுவதும்
ஏனடி உனக்கு
தெரியமறுக்கின்றது!,

நேசிக்க நீ இருப்பாய் என்று
நெருங்கி வரும் காலங்களில்
விலகி ஏனடி
காயங்களில் தவிக்க வைக்கின்றாய்?!
காலம் முடியாத போதும்
காயங்கள் மட்டும்
தொடர்வது சரியா?!,

கோபம் என்ற பெயரில்
என்னை கொன்று குவிப்பவளே
கொஞ்சம் நின்று
என் வார்த்தைகளை
கேட்டுப்பாரடி!
அப்போது புரியும்
என் வாழ்வில் நீ யார் என்று ,

தளிர் மலராக
உன்னை எண்ணி
தவம் புரியும் என்னை ஏன்
தவிக்க வைக்கின்றாயா?
என் தவம் உனக்கென்று
புரியவில்லையா?
இல்லை
என் தளிர் மலர்
நீ என்று தெரியவில்லை?!
உள்ளத்தை துறக்க தெரிந்த
நீ எதற்காக இன்னும்
உதடுகளை திறக்காமல் இருக்கிறாய்?!

உரிமைக்காக போராடும்
உண்மை காதல் ஒன்று
உனக்கு தெரியாமல் போக
என்னை அறியாமல்
உன்னை தேடுகின்ற
என் தேடலுக்கு விடை வந்து
நீ சொல்வாயா!

உடலை மறைத்து
ஒளிந்து கொண்டு
ஒதுங்கி நிற்கும் போது
உன்னை காணும்
என் உயிரின் வேதனையே
உயிரே
நீ உணர்வாயா...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Sep-17, 7:17 pm)
Tanglish : unarvaayaa
பார்வை : 289

மேலே