நவராத்திரி

நவராத்திரி

அடுக்கடுக்கான படிகள் கட்டி
அண்டைவீட்டார் வியக்கும் வண்ணம்
அழகான பொம்மைகளால் கொலு வைத்து
அலங்காரமாக விளக்குகள் கண்சிமிட்ட
அழைத்து வந்த மகளிர்கள் ஆரவாரிக்க
அவதாரமான மகாசக்தியை ஆராதித்து
அகதூய்மையுடன் தொழுது நின்று
அமைதி காக்க வேண்டி அன்னையை
அர்த்தமுள்ள பாடல்களால் வழிபட்டு
அசுரனை அழித்ததை கொண்டாடும்
அந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி என அறிவாய்!

எழுதியவர் : கே என் ராம் (20-Sep-17, 6:48 am)
பார்வை : 84

மேலே