வேலைக்காரன்
நீரால் நிரம்பியது கடல்
வாயுவால் நிரம்பியது நிலம்
ஒருவகையில் இதுவும் கடல்
போன்றே பாவிப்போம்
கடலிலே மீன்களை மீன்களே
கொன்று தின்கிறது
நிலக்கடலிலே மனிதர்களை
மனிதர்களே கொல்கிறார்கள்
நிலம் நிறைவதற்கு பிறப்பு
நிறைந்து வழியும் நிலங்கள்
நிறைந்ததை குறைக்க இறப்பு
குறைந்ததை நிறைக்கவும்
நிறைந்ததை குறைக்கவும்
அமைந்த ஒரு வேலைக்காரன்
அவனையே நாம் கடவுள் என்கின்றோம் கௌரவமாக