என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 67
முபாரக் வீட்டில் முபாரக், ரியாஸ், விஜய் மூவரும் ப்ரவீனுக்காக காத்திருக்க, பிரவீனை பார்த்ததும் முபாரக் வெளியே வந்தான், "என்ன டா, போனை ஆப் பண்ணிட்ட, விஜிக்கு போன் பண்ணினா எடுக்காம கேட் பண்ணிகிட்டே இருந்தா, என்ன ஆச்சு டா, சரி வா சாப்பிடலாம், உள்ள விஜய் அண்ட் ரியாஸ் இருக்கான்" என்றான் முபாரக்.
வெளிச்சத்தில் பிரவீனின் முகத்தை பார்த்ததும் ஆதிர்ந்துபோனான் முபாரக்.
"டேய், நில்லு டா, என்ன டா ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க? கண்ணு ஏன் கலங்கிருக்கு?" என்றான் முபாரக்.
"ம்ம்ம், என்ன டா? " என்றான் பிரவீன்.
"கண்ணு ஏன் கலங்கிருக்கு ன்னு கேட்டேன்?" என்றான் முபாரக்.
"அதுவா, வர்ற வழில பூச்சி அடிச்சுருச்சு டா கண்ணுல" என்றான் பிரவீன்.
"அவ்ளோ தான, சரி வா, சாப்பிடலாம்" என்றான் முபாரக்.
விஜய் மற்றும் ரியாஸ் பிரவீனின் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்த அடுத்த கணம் முபாரக்கின் முகத்தை பார்த்தனர், "இப்போது எதுவும் பேச வேண்டாம்" என்று கண்களால் சைகை காட்டினான் முபாரக்.
புரிந்துகொண்டு இருவரும், "சரி டா, நாங்க மாடில இருக்கோம், நீ ப்ரவீனுக்கு சாப்பிட குடுத்துட்டு மாடிக்கு வா, பிரவீன், நீ சாப்பிட்டு மாடிக்கு வா டா" என்று கூறிவிட்டு இருவரும் மாடிக்கு செல்ல,
"நர்கீஸ், முபாரக் கு சாப்பிட குடு, குடுத்துட்டு அவனை கூட்டிட்டு மாடிக்கு வா" என்றபடி மாடிக்கு சென்றான்.
நர்கீஸ் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு வெளியே வந்து,"ஏன் மாமா, நீங்க அந்த சாப்பாடை அவனுக்கு குடுக்கக்கூடாதா?" என்றபடி வர, பிரவீனின் முகத்தை பார்த்து ஏதோ பிரச்சனை என்று மட்டும் அறிந்தாள். முபாரக்கின் முகத்தை பார்க்க, அவன் தனது தலையை மட்டும் ஆட்டி "எதுவும் பேசவேணாம், கையால் "சாப்பிட்டுவிட்டு பிறகு" என்றபடி சைகை காட்ட, "சரி மாமா, நான் சாப்பாடு போட்டுட்டு பிரவீனை மாடிக்கு கூட்டிட்டு வரேன், நீங்க போங்க, ஏதோ முக்கியமான டிஸ்கஷன் பண்ணிட்டு இருந்தீங்க இல்ல?" என்று சமாளித்துக்கொண்டாள் நர்கீஸ்.
மாடிக்கு சென்ற முபாரக் விஜய் ரியாஸிடம் கூறினான், "டேய், ஏதோ பெரிய பிரச்சனை ஆயிருக்கு டா, எனக்கு கொஞ்சம் பயம் தட்டுது, பொய் சொல்றான்" என்றான்.
"என்னடா பொய் சொல்றான், என்ன சொன்னான், அவன் கண்ணு ஏன் கலங்கி இருக்கு, முகமெல்லாம் வீங்கி பொய் இருக்கு, என்ன ஆச்சு? நீ எதுக்கு கேக்கவேணாம் னு ஆக்ஷன் காட்டின எனக்கு?" என்றான் ரியாஸ்.
"இல்ல டா மச்சான், அவன் அழுத்துருக்கான், ஏதோ பிரச்சனை ஆயிருக்கு டா, ஆனா நான் கேட்டதுக்கு கண்ணுல பூச்சி அடிச்சுருச்சுன்னு சொல்றான், இவன் போன் ஆப் ல இருக்கு, விஜி போனை எடுக்காம கட் பண்ரா, எல்லாம் லிங்க் பண்ணினா என்னவோ நடந்திருக்குன்னு தோணுது......தப்பா ஏதோ நடந்திருக்கு" என்றான் முபாரக்.
"அதை கேட்ருக்கலாமே, அதைவிட்டுட்டு இப்போ மாடிக்கு எதுக்கு வரச்சொன்ன" என்றான் விஜய்.
"அவன் சாப்பிடற வரைக்கும் எதுவும் பேசவேணாம், அதுமட்டும் இல்ல, நம்ம முகத்தை பாத்தா அவன் ஓவர்வெல்ம் ஆகி சாப்பிடாம குமுற ஆரம்பிச்சுடுவான், அதான் அவன் முதல்ல சாப்பிடட்டும்" என்றான் முபாரக்.
"நீ சொல்றதும் சரி தான் டா, நர்கீஸ் ஏதாவது கேட்டான்னா?" என்றான் ரியாஸ்.
"எதுவும் பேசவேண்டாம்னு சொல்லிட்டேன், எதுவும் கேக்க மாட்டா?" என்றான் முபாரக்.
"சரி டா, விஜிக்கோ, காயத்ரிக்கோ போன் பண்ணி கேளு" என்றான் விஜய்.
"இல்ல, காயத்ரி லோக்கல் ல இல்ல, சோ அவளுக்கு இன்னும் விஷயம் தெரிஞ்சிருக்காது, ப்ராப்ளேம் தான் ஆயிருக்கு, சோ, விஜி கண்டிப்பா காயத்ரிகிட்ட இதை சொல்ல சான்ஸ் ரொம்ப கம்மி, என்ன ப்ராப்லம் னு தெரியாம நேரடியா விஜிக்கு கால் பண்ணி நம்ம இன்னும் பிரச்னையை பெருசா ஆகிட கூடாது" என்றான் முபாரக்.
"இப்போ என்ன தான் பண்றது டா, இவன் இப்டி இருந்தா நாளைக்கு நெய்வேலி கூட செமி பைனல்.....எப்படி டா?" என்றான் ரியாஸ்.
"பைத்தியக்காரா, பிரவீனை விட மேட்ச் உனக்கு முக்கியமா, " என்றான் முபாரக்.
"அவனை விட மேட்ச் முக்கியம் இல்ல தான், ஆனா தோத்துட்டா பிரவீன் இன்னும் கஷ்டப்படுவான், அவனை கஷ்டப்படுத்த கூடாது இல்ல?" என்றான் ரியாஸ்.
முபாரக்கே கண்கலங்கி ரியஸை கட்டி அணைத்தான். புரியுது டா, பிரவீனை கஷ்டப்படுத்தக்கூடாது, நாம ஜெயிப்போம் டா, இப்போ அது முக்கியம் இல்ல, அவனோட முகத்தை பாத்தியா, ஏதோ சாதாரண பிரச்னையா தெரில, ரொம்ப அப்னார்மலா தான் இருக்கான், அவன் இப்போ வந்து என்ன பேசினாலும் டென்சன் ஆகவோ, கண்கலங்கவோ அவனை டிவிஸ்ட் பண்ரா மாதிரியோ எதுவும் பேசக்கூடாது, கேர்புல்லா வார்த்தைகளை யூஸ் பண்ணுங்க புரியுதா" என்று முபாரக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நர்கீஸும் ப்ரவீனும் மாடிக்கு வந்தனர்.
"மாமா, சரியா சாப்பிடல, சும்மா போட்டு பெசஞ்சுட்டே இருந்தான், ரெண்டு மூணு வாய் தான் மாமா சாப்பிட்டான்" என்றாள் நர்கீஸ்.
"சரி நர்கீஸ், நீ போ, போய் அந்த சாப்பாடா எடுத்துட்டு வா" என்றான் முபாரக்.
"சரி மாமா" என்றபடி கீழே சென்றாள் நர்கீஸ்.
"வா பிரவீன், உக்காரு," என்றபடி அவனை பக்கத்தில் உட்கார வைத்து அவன் தொழில் கையை வைத்து அழுத்தினான் முபாரக்.
அமைதியாய் தலையை நிமிராமல் உட்கார்ந்தான் பிரவீன்.
"என்ன டா, மணி பன்னெண்டு ஆகப்போகுது, விஜிக்கு விஷ பண்ணலாமே?" என்றான் முபாரக்.
அமைதியாய் இருந்தான் பிரவீன்.
விஜய் மற்றும் ரியஸை பார்த்து தலை ஆட்டினான், அதன் அர்த்தம் "ஆமாம், விஜய்க்கும் ப்ரவீனுக்கும் இடையே ஏதோ பிரச்சனை" என்பது.
"என்ன டா, அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? ஏதாவது பேசு, பாரேன், எப்படி பூச்சி கண்ணுல அடிச்சுருக்குன்னு, நான் தான் சொல்லிருக்கேனே, நைட் ல பைக் ஓட்டும்போது கண்ணாடி போட்டுக்கோன்னு, பாரு எப்படி செவந்து வீங்கி போயிருக்குன்னு, ஏதோ பெரிய பூச்சி அடிச்சிருக்கு போல!" என்றான் முபாரக்.
அதற்கும் அமைதியாய் இருந்தான் பிரவீன்.
"விஜய், நீ ஒண்ணு பண்ணு, கீழ போய் வாப்பா ரூம் ல கேராமைசின் னு ஒரு ஐ டிராப்ஸ் இருக்கும், அதை எடுத்துட்டு வா, கண்ணுல போட்டு விடலாம்" என்றான் முபாரக்.
"நர்கீஸ் சாப்பாடை எடுத்து வந்தாள்.
"இந்தாங்க மாமா" என்றாள் நர்கீஸ்.
"சரி நர்கீஸ் நீ போ, நாங்க வரோம்" என்றான் முபாரக்.
"மாமா...." என்று நர்கீஸ் முடிப்பதற்குள் "போ ன்னு சொன்னேன்" என்று குரலை சற்று உயர்த்தினான்.
விஜய் ஆச்சர்யப்பட்டு போனான், முபாரக்கின் கையை அழுத்தினான் விஜய்.
சுதாரித்துக்கொண்ட முபாரக், "போ நர்கீஸ், நான் வரேன். சொல்றேன் இல்ல?" என்று அமைதியாய் கூறினான்.
ஏதோ பெரிய பிரச்சனை என்பதை உணர்ந்துகொண்டாள் நர்கீஸ். மறுவார்த்தை பேசாமல் கீழே செல்ல, "ஏன் டா, இப்படி சாப்பிடாம உடம்பi வருத்திக்க கூடாது, எந்த பிரச்சனை இருந்தாலும், சாப்பிட்டு யோசிச்சா தான் சரியான முடிவு எடுக்க முடியும், உடம்புக்கும் மனசுக்கும் தெம்பு வேணும் இல்லையா.....எந்த பிரச்சனை இருந்தாலும் சாப்பிடற சாப்பாடு மேல உன்னோட கோவத்தை காட்டக்கூடாது பிரவீன், இந்தா வாய காட்டு, நான் உன் முபாரக் ஊட்டிவிடறேன், எங்க ஆ....காட்டு, நல்ல பையன் தான நீ" என்று ஏதோ சின்ன குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல வாயருகே உணவை கொண்டு சென்றான் முபாரக்.
ஆனால் பிரவீன் வாயை திறக்கவில்லை.
அந்த நேரம் ரியாஸ் கையில் சிறிய மருந்து பாட்டிலுடன் வந்தான், "இந்தா டா" என்று நீட்ட,
"சரி, மருந்து போட்டுட்டு அப்புறம் சாப்பிடலாம், வா படு" என்றபடி அவனை தனது மடியில் படுக்க வைத்தான் முபாரக்.
"கண்ணை திற பிரவீன்" என்றான் முபாரக்.
"டேய் கண்ணை ஓபன் பண்ணு டா, சொல்றான் இல்ல" என்று சத்தம் போட்டான் ரியாஸ்.
"ரியாஸ், எதுக்கு கத்தற இப்போ, இரு கண்ணு எரியுது போல அவனுக்கு, அதான், இல்ல பிரவீன்?" என்று கேட்டுக்கொண்டே ரியாஸை பார்த்து தலையை ஆட்டினான், அதற்கு பொருள்,"அப்படி கத்தி பேசவேண்டாம்" என்பதை ரியாஸ் புரிந்துகொண்டான். ஆனால் கோபமாக எழுந்து மாடியின் மறுபக்கத்திற்கு சென்று ரோட்டை பார்த்தபடி நின்றான்.
"பிரவீன், எழுந்திரு, சரி மருந்து வேண்டாம், சாப்பிடு, இப்போ நீ எனக்காக சாப்பிடணும், நான் உன்னோட பிரென்ட் னா சாப்பிடணும்" என்றான் முபாரக். சொல்லிவிட்டு தட்டை பிரவீன் முன்னாள் வைத்துவிட்டு எழுந்து சென்று ரியாஸ் பக்கத்தில் நின்றான் முபாரக்.விஜயும் எழுந்து சென்றுவிட,படுத்தபடியே தனது எதிரே இருக்கும் தட்டை பார்த்தான் பிரவீன்.
அங்கே முபாரக் ரியாஸிடம், "டேய், அவனே ஏதோ சொல்ல முடியாம தவிக்கிறான், இப்டி கோவத்தை காட்டினா எப்படி டா, சின்ன பையன் டா அவன், அவனுக்கு இருக்கற மெச்சூரிட்டி கொஞ்சம் கூட உனக்கு இல்லையே" என்றான் முபாரக்.
"டேய் நீ தான் டா ரொம்ப பொறுமையா டீல் பண்ற, விஜிக்கு போன் பண்ணி கேக்றதுல என்னடா உனக்கு பிரச்சனை?" என்றான் ரியாஸ்.
"பிரச்சினையே விஜி யால தான் டா" என்றான் முபாரக்.
விஜய் ரியாஸ் இருவரும் பேய் அறைந்தாற்போல முபாரக்கின் முகத்தை பார்த்தனர்.
"இதை கூட புரிஞ்சுக்க முடிலன்னா நீ என்னடா பிரென்ட், அமைதியா இரு, நாம திட்டினா எப்படி அவன் கஷ்டப்படுவானோ அதே தான் விஜி திட்டினாலும், என்னன்னு பொறுமையா தான் கேக்க முடியும், உனக்கு பொறுமை இல்லன்னா நீ கெளம்பு, உனக்கு என்ன பிரச்சனை அதை சால்வ் பண்ணினா போதும், ஆனா எனக்கு அவன் கஷ்டப்படாம அவனை இந்த பிரச்சனைல இருந்து வெளில கொண்டு வரணும், நம்ம சர்க்கிள் ரொம்ப சின்னது டா, ஏற்கனவே சார்லஸ் இழப்பு நம்மளால ஈடுகட்ட முடியாம தவிக்கிறோம், பிரவீன் முகத்தை பாத்தா ஏதோ ரொம்ப இக்கட்டான நெலமை ல இருக்கற மாதிரி தெரியுது டா, புரிஞ்சுக்கோ ரியாஸ்" என்றான் முபாரக்.
"சாரி டா, ஏதோ கோவத்துல பேசிட்டேன், அவன் முகத்தை இப்டி சோகமா பாக்க முடில டா, அதான் ஆதங்கம்" என்று சொல்லும்போதே பின்னால் பிரவீன் சோற்றுத்தட்டுடன் நின்றுகொண்டிருந்தான், "முபாரக், எனக்கு ஊட்டி விடறியா டா" என்றான் அழுதுகொண்டே.
முபாரக்கும் கண்கள் கலங்கியபடியே, "ஓ ஊட்டிவிடறேனே.....டேய், விஜய், போ போய் அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துட்டு வா, ரியாஸ் நீ போய் கொஞ்சம் தொட்டுக்க ஏதாவது எடுத்துட்டு வா" என்றான் முபாரக்.
இரண்டு வாய் சோறு உண்டிருப்பான் பிரவீன், முபாரக்கை கட்டி பிடித்து சத்தமாக அழுதான்.
"என்ன டா என்ன ஆச்சு, இப்போ சொல்லு, என்ன மனசுல போட்டு உருட்டிட்டு இருக்க, சொல்லு டா, பூச்சி அடிச்சுருச்சுன்னு பொய்....அதுவும் என்கிட்டே, உனக்கே நல்லா தெரியும், நான் ஈஸியா கண்டுபுடிச்சுடுவேன் நீ பொய் சொன்னா ன்னு, என்ன ஆச்சு சொல்லு" என்றான் முபாரக்.
"என்ன டா சொல்லணும், என்னோட உயிரே என்கிட்டே இல்ல டா" என்றான் பிரவீன்.
மூவருமே அமைதி ஆயினர்.
முபாரக் சற்று சுதாரித்துக்கொண்டு, "என்ன டா ஆச்சு சொல்லு" என்றான்.
"எவ்ளோ சந்தோஷமா போனேன் டா, கண்டிப்பா எனக்கு தெரியும் விஜி ஏதோ ஒரு பெரிய இக்கட்டுல மாட்டிட்டு இருக்கா, அதான் அப்படி பண்ணிட்டா" என்றான் பிரவீன்.
"என்ன டா பண்ணினா, சொல்லு டா" என்றான் முபாரக்.
"நான் அனாதையாம், என்மேல இரக்கம் தான் வருமாம், காதல் வராதாம்" என்றான் பிரவீன்.
"அப்டின்னு அவ சொன்னாளா, இல்ல நீயா நெனச்சுக்காரியா?" என்றான் முபாரக்.
"அவதான் டா சொன்னா, நான் பாசம் காட்டற மாதிரி நடிக்கறேனாம், விஜியை ஒரு செண்டிமெண்ட் ப்ரோபெல்டு மாதிரி ஆக்கிட்டேனாம், நான் சைக்கோவாம், எமோஷனல் ஸ்டுப்பிடாம், உண்மை தான டா, நான் ஒரு சென்டிமென்டல் இடியட் தான, பாசத்துக்கும் காதலுக்கும் இயக்கத்துக்கும் வித்யாசம் தெரியாம தான டா இப்டி ஒரு நடைபிணமா வந்திருக்கேன் இப்போ" என்று அழுதான் பிரவீன்.
"பிரவீன், நீ அழாம சொல்லு, என்ன ஆச்சு" என்றான் முபாரக்.
"விஜி மேல நான் ரொம்ப உரிமை எடுத்துக்கிட்டேனாம், நான் யாரு அவளுக்குன்னு கேட்டா?" எந்த கேள்விலயே செத்துட்டேன் டா" என்றான் பிரவீன்.
"என்னடா சொல்ற, விஜி அப்டி கேட்டாளா?" என்றான் விஜய்.
"விஜய், இரு டா, நீ சொல்லு பிரவீன்" என்றான் முபாரக்.
"நாம எல்லாருமே ஒரு சென்டிமென்டல் முட்டாளாம், அனாவசியமா என்னை பெரிய ஆள் பெரிய ஆள் னு ஹைப் பண்ணி பண்ணி ஒரு மாயை கிரியேட் பண்ணிடீங்களாம், நம்ம யாரையுமே பாக்க அவளுக்கு பிடிக்கலையாம், எஸ்பெஷாலி என்னை....என்னை பாத்தாலே அருவருப்பான இருக்காம் டா" என்று கலங்கிய கண்களுடன் கூறினான் பிரவீன்.
"அவ்ளோ தானா பிரவீன்? வேற ஏதாவது சொன்னாளா?" என்றான் முபாரக்.
"இதுக்கு மேலயும் கேட்டு ஏன் டா அவனை அழவெக்கணும்?" கோபமாய் கேட்டான் ரியாஸ்.
"ரியாஸ், இப்போ நீ சும்மா இருக்க போறியா இல்லையா?" என்றான் முபாரக்.
"நீ சொல்லு டா" என்று பிரவீனிடம் கேட்டான் முபாரக்.
"என்னை என்ன வேணாலும் சொல்லட்டும், என்னை கொல்ல கூட விஜிக்கு உரிமை இருக்கு ஆனா நான் விஜியை ஒரு பைத்தியக்கார மாதிரி ஆகிட்டேன், என்னால அவ ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான்னு அவ சொன்னதை என்னால எடுக்கவே முடில டா, சாத்தியமா நான் அவளை கஷ்டப்படுத்தனும் னு என் கனவுல கூட நெனைச்சதில்ல டா" என்றான் பிரவீன்.
"தெரியும் டா, நீ விஜி மேல எவ்ளோ பாசம் வெச்சுருக்கான்னு எனக்கு தெரியும், அப்புறம் என்ன சொன்னா?" என்றான் முபாரக்.
"என்னை மாதிரி அனாதைக்கு எல்லாம் காமனா ஒரு ஹெபிட் இருக்குமாம், யாராவது இரக்கம் காட்டினா அவங்களையே......."துக்கம் தொண்டையை அடைத்தது.
"டேய்...பிரவீன், என்ன டா" என்றான் விஜய்.
"இரு டா, அழைத்தும், அவன் கஷ்டத்துக்கு அவன் அழுது தான் ஆறுதல் அடஞ்சுக்கணும், நீ சொல்லு டா, அவங்களையே....." என்றான் முபாரக்.
"அவங்களையே நாய் மாதிரி பின்னால சுத்தி வருவோமாம், நான் விஜியை பொறுத்தவரைக்கும் ஒரு நாய் போல ஆயிட்டேன் டா" என்றான் பிரவீன்.
"டேய், இப்போ அழறத நிறுத்து டா, விஜி இல்லன்னா என்னடா, நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம்" என்றான் ரியாஸ்.
"ரியாஸ், விஜி வேற நாம வேற, விஜி ப்ரவீனுக்கு இல்லன்னு நீ எப்படி முடிவு பண்ற, என்ன நடந்தது, அதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு தெரியாம நீயே விஜி ப்ரவீனுக்கு இல்லன்னு பேசாத, அவன் ஒடஞ்சு போயிடுவான், நீ சொல்லு டா பிரவீன்" என்றான் முபாரக்.
"எனக்கு பொறுமை இல்ல டா, நான் போறேன்" என்றபடி கிளம்பிய ரியாஸை "நீ இப்போ இங்க இருக்கணும்" என்று ஒரே வார்த்தையில் கட்டுப்படுத்தினான் முபாரக்.
இருக்க மனமின்றி உட்கார்ந்தான்,"இவன் அழறத என்னால பாக்க முடில டா" என்றான் ரியாஸ்.
"எண்களாலயும் தான் முடில, கஷ்டமா இருக்கு, ஆனா, நாம இப்போ இவன் கூட இல்லன்னா வேற யாரு டா இருப்பா?" என்றான் முபாரக்..
கண்களை மூடியபடி உட்கார்ந்தான் ரியாஸ்.
"நீ சொல்லு டா, அப்புறம் என்ன நடந்தது" என்றான் முபாரக்.
"எனக்கு இருக்கற ஒரே ஐடென்டிட்டி நான் ஒரு அனாதை, சைக்கோ அவ்ளோதானாம், நான் முகத்தை பாவமா வெச்சு நடிச்சேனாம்" என்றான் பிரவீன்.
"அவ்ளோ தானா இன்னும் இருக்கா?" என்றான் முபாரக்.
"எல்லாம் சொல்லிட்டு, நான் விஜியை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் னு சொன்னா டா, சத்தியமா சொல்றேன், நான் என்னிக்குமே விஜி ஹர்ட் பண்றமாதிரி எதுவும் பண்ணதும் இல்ல பண்ணவும் மாட்டேன் டா" என்றான் பிரவீன்.
"அது தெரியும் டா, உனக்கு விஜியை அவ்ளோ பிடிக்கும், அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் முபாரக்.
"நீங்க எல்லாருமே அவகிட்ட நடிச்சு அவளை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டீங்களாம்" என்றான் பிரவீன்.
"ஓஹோ, அப்புரம் என்ன சொன்னா விஜி?" என்றான் முபாரக்.
"நான் சொன்னேன், உன்னோட சந்தோசம் தான் எங்க சந்தோசம் னு நாங்க நெனைக்கிறோம் னு சொன்னேன், அதுக்கு அவ....." என்றான் பிரவீன்.
"அதுக்கு அவ.....என்ன சொன்னா பிரவீன்?" என்றான் முபாரக்.
"இந்த டோர்னமெண்ட்ல நாம தோத்தா ரொம்ப சந்தோஷப்படுவாளாம், அதுவும் டேவிட் கிட்ட தோத்தா...." என்றான் பிரவீன்.
முபாரக்கே அதிர்ந்துவிட்டான், சற்று அமைதிக்கு பின்னர்,"ஏன் ஸ்பெஷலா டேவிட் கிட்ட தோக்கணும்?" என்றான் முபாரக்.
"ஏன்னா.....விஜி டேவிட லவ் பண்ராளாம்" என்றான் பிரவீன்.
ஒரு நிமிடம் முபாரக்கிற்கே என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போனான்.சற்றே கண்ட்ரோல் செய்துகொண்டு,"அதுக்கு நீ என்ன சொன்ன" என்றான் முபாரக்.
"யாரு சொன்னாலும் எவன்கிட்டயும் நான் உயிரோட இருக்கற வரைக்கும் தோக்க மாட்டோம் தோக்க விடமாட்டேன் னு சொன்னேன் டா" என்றான் பிரவீன்.
"என்ன டா, பைத்தியம், இப்படியா சொல்லுவ, விஜி சந்தோசம் தான டா முக்கியம், அவ சந்தோஷமா இருந்தா நீ சந்தோஷமா இருப்ப, நீ சந்தோஷமா இருந்தா நாங்க சந்தோஷமா இருப்போம், இந்த டோர்னமெண்ட் இல்லன்னா அடுத்த டோர்னமெண்ட், இப்போ என்ன நாம தோத்தா விஜி சந்தோஷமா இருப்பாளா, தோப்போம், என்னடா, விஜய் நான் சொல்றது சரி தான" என்றான் முபாரக்.
விஜய்க்கும் ரியாஸுக்கும் ஒன்றும் புரியவில்லை.
"நீ என்ன பண்ற, விஜிக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பு, நாங்க இன்கேஸ் விழுப்புரம் கூட மேட்ச் வந்தா உனக்காக தொக்கறோம் னு" என்றான் முபாரக்.
"டேய், என்ன டா" என்றான் ரியாஸ்.
"ஆமாம் ரியாஸ், அதான் சரி, நீ சொல்லு பிரவீன் அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் முபாரக்.
"எனக்கு அந்த ஈகோ உனக்கு எப்படி அவ்ளோ முக்கியமோ அதே போல தான் அவளுக்கு கோபம் முக்கியம், னு சொல்லிட்டு நம்ம டீமை சைக்கோ கும்பல், இடியாடிக் பீப்பிள் னு சொன்னா ......அதுக்கு நான் இன்னொருவாட்டி அவங்கள பத்தி ஏதாவது பேசின.......அப்புறம் இந்த பிரவீனை எதிரியா பாப்ப விஜி னு சொன்னேன், ஆனா கோவத்துல தான் சொன்னேன், கண்டிப்பா விஜியை என்னால எதிரியா பாக்க முடியாது டா, கோவத்துல தான் சொன்னேன்" என்றான் பிரவீன்.
"சரி, கோவத்துல சொல்லிட்டா, அதுக்கு அவ என்ன சொன்னா?" என்றான் முபாரக்.
"அதுக்கு அவ எதுவும் சொல்லல, இந்த டேவிட் நான் விஜிகிட்ட அப்டி பேசியதும் என்ன டா பொண்ணுகிட்ட சீன போடறியான்னு கேட்டான்" என்றான் பிரவீன்.
"டேவிட் அங்க இருந்தானா டா" என்றான் முபாரக்.
"ஆமாம், டேவிட் தான் விஜியை அவங்க வீட்ல இருந்து கூட்டிட்டு வந்திருந்தான்" என்றான் பிரவீன்.
"ம்ம்ம், அப்புறம் என்ன ஆச்சு?" என்றான் முபாரக்.
"இருந்த கோவத்துல டேவிட் இன்டெர்ப்பியர் ஆனதும் யாரு டா பொண்ணுக்கிட்ட சீன போட்றா, அவ பொண்ணுங்கறதால தான் பேசிட்டு இருந்தேன், நீ என்கிட்டே சீன போட்டதால் தான் இந்த அடி உனக்கு ன்னு சொல்லி டேவிட அடிச்சுட்டேன் டா, அப்புறம் விஜிகிட்ட தேங்க்ஸ் பார் யுவர் பர்த்டே பார்ட்டி, ரொம்ப சந்தோஷமா போறேன், நீ இனிமே என்கிட்டே பேச மாட்ட இல்ல விஜி, என்னை விட்டு போய்ட்டியா விஜி, நான் உன் மனசுல இல்ல? ன்னு கேட்டேன் அதுக்கு எந்த பதிலும் சொல்லல, நான் அதுக்கு மேல அங்க இருந்தா அழுதிருப்பேன், அதான் கெளம்பி வந்துட்டேன் டா" என்றான் பிரவீன்.
முபாரக் அமைதியாய் இருந்தான்.
"இருந்த துக்கம், கோவம், அழுகை, கவலை எல்லாம் என்னை ரொம்ப வாட்டுச்சு டா, இருந்த கோவத்துல பைக்கோட விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்துல இருந்து பாஞ்சு அந்த ஹை வோல்டேஜ் கேபிள் ல செத்துடலாமான்னு தோணுச்சு டா" என்று அழுதான் பிரவீன்.
"செத்துடலாம் னு நெனச்சியா......டேய்......" என்றபடி விஜய் பிரவீனை கட்டி அணைத்துக்கொண்டான்.
"ம்ம். சரி பிரவீன், இப்போ உன்னோட மனசு லே என்ன இருக்கு சொல்லு" என்றான் முபாரக்.
"நீ எப்படி டா, இன்னும் விஜி சந்தோசம் தான் முக்கியம், நாம தோக்கலாம் னு சொன்ன" என்றான் பிரவீன்.
"டேய், பிரவீன், விஜி கோவப்பட்டா, நாம கோவப்படணுமா, நல்லா தெரிஞ்சுக்கோ, அவளோட சிச்சுவேஷன் என்ன, அவ எந்த நெலமை ல அப்டி சொன்னா, எல்லாத்தையும் ஆராஞ்சு பாத்தியா, எனக்கே தெரியும் விஜி உன்னை லவ் பண்ணினான்னு, அவ அப்டி சொல்ல காரணம் என்னவா இருக்கும், ஏதாவது க்ளூ கெடச்சுதா உனக்கு?" என்றான் முபாரக்.
"அவ அப்டி சொன்னதுமே நான் செத்துட்டேன் டா, அதுக்கப்புறம் விஜி முகம் மட்டும் தான் என் கண்ணுல இருந்துச்சு" என்றான் பிரவீன்.
"சரி, நான் சொல்றத கேளு, டேய் ரியாஸ், விஜய் இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டு, டீம் கு தெரிஞ்சா நாளைக்கு செமி ல எல்லாரும் டிமோட்டிவேட் ஆவாங்க, ஆனா இவன் மூஞ்சிய பாத்தா கண்டு புடிச்சிடுவாங்க, இவன் இல்லாம நெய்வேலி கூட விளையாடி ஜெயிக்கிறதும் கஷ்டம், சோ, இவன் கேம் ல இருப்பான், ஆனா எந்த ஒரு ரெஸ்பான்சிபிலிட்டியும் இவன் தலை ல போயிடாம நாம ஆடணும், இங்க நடந்ததை நாம யோசிச்சா நாமளும் சரியா விளையாட முடியாது, இது நம்ம மூணு பேருக்கான அட்வைஸ், அடுத்தது நான் முடிவு பண்ணிட்டேன், நாளைக்கு செமி முடிஞ்சதும் நாம விஜி ஆபீஸ் கு போறோம், அவளை மீட் பண்றோம், நாம மீல்ஸ் நானும் ப்ரவீனும், ஓகே?, ஏன்னா கண்டிப்பா விஜி இப்டி பேசினதுக்கு பின்னாடி என்ன ப்ராப்ளேம் இருக்கு என்ன மோட்டிவ் இருக்குன்னு நான் போனா கொஞ்சம் கெஸ் பண்ண முடியும், எல்லாத்தைவிட முக்கியம், இந்த கொஞ்ச நாள் காயத்ரி போன் பண்ணினா அவாய்ட் பண்ணுங்க, ஏன்னா இந்த விஷயம் அவளுக்கு தெரிய கூடாது, விஜி சொல்லிருக்க மாட்டா, சொல்லவும் மாட்டா என்பது என்னோட கெஸ். சோ நாமளா போய் காயத்ரிகிட்ட சொல்லி அவ விஜிகிட்ட பேசினா அது இன்னும் தப்பா முடியும். டேய், நீயும் ரியாசும் கிளம்புங்க, நாளைக்கு காலைல மேட்ச் ல பாக்கலாம், பிரவீன், நீ இங்கயே தூங்கு, அழாத, வாப்பா கண்டுபுடிச்சிடுவாரு" என்றான் முபாரக்.
இரவு முழுதும் நரகமாய் இருந்தது ப்ரவீனுக்கு. அவனை தனது மடியில் போட்டுக்கொண்டு முபாரக்கும் ஒரு நிமிடம் கூட தூங்காமல் பிரவீனின் தலையை கோதிவிட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தான்,பிரவீனின் கண்ணீர் முபாரக்கின் தொடைகளை ஈரமாக்கியவண்ணம் இருந்தன.
பகுதி 67 முடிந்தது.
------------------------தொடரும்----------------------