மனமேடையில் என்னவளுக்காக
என் அழகே...
என் அழகே...
என் அழகே...
நீ என் வரமடி
உன் கை கோர்ப்பது
என் முன் ஜென்ம தவமடி
வான மறைவில் ஆதவன் மறைந்தால்
உன் முகம் தேடுமடி என் கண்கள்
நிலவே உன் முகம் தேடுமடி
மஞ்சத்தில் ஊடல் முடிந்த பின்னும்
காதல் நீளுமடி,என் காதலும்...
உன்னையின்றி என் காதலை யாரும் பெறமுடியாது பெண்ணே!...
என் வாலிபம்,வயதான காலம் யாவும் உன் இருக்கத்திலே...
என் அழகே...
என் அழகே...
என் அழகே...
நீ என் உயிரடி
உன் அன்பு காதலும்,
உயிர் நேசமும் எனக்கே சொந்தம்...
நீ,நான்,இனி நாம்யென வருங்காலம் இனிக்கும்
இதுவரை பேசாத மெளணங்கள் பேசி இரவுகள் நீளும்...
இது நம் வாழ்வின் பொற்காலமடி...
உன் கைகோர்த்து என் வாழ்க்கை நீளுனும்
இதுவே என் யாசிப்பு
என் உயிர் காதலியே...
_அ.பெரியண்ணன்