அன்றுபோலவே இன்றும்

உனக்காக காத்திருந்த
அந்நாளில்

எனக்கு துணையாய்
நின்ற

செடி இன்று கிளைபரப்பி
நின்றாலும்

கதிரவனின் கோபக்

கனல்களுக்கு மத்தியில்
அமைதியாய்

இந்திய மனைவிமாராய்

அன்றுபோலவே இன்றும்!

நான் மட்டும் உன்

நினைவுகளை சுமந்து

அங்கும் இங்கும்
அலைகிறேன்

அன்றுபோலவே இன்றும்..,

#சேகர்_நா

எழுதியவர் : Sekar N (27-Sep-17, 9:47 am)
பார்வை : 539

மேலே