மறுமலர்ச்சி நம்வாழ்வில்
வற்றிய நீர்நிலைகளும்
நிரம்பிடும் நிலையில்
பெய்துவரும் மழையால்
வருகின்ற நீர்வரத்தால் ...
இடைக்கால நிவாரணம்
இடையிலிந்த மழையும்
ஆறுதல்தான் ஆனாலும்
தேர்தல்வரை நின்றிடுமா ...
சர்ச்சைக்குக் குறைவில்லை
சரவெடிகளாய் வெடிக்குது
கட்சிக்குள் பிரிவென்றால்
கடமையிலும் பிழையா ...
அணிகள் மாறுவதிங்கு
அவ்வப்போது செய்தி
அவதூறுகள் சுமத்துவது
அன்றாட முக்கியச்செய்தி ...
காணுகின்ற மக்களும்
விரக்தியின் விளிம்பில்
தேற்றிட எவருமில்லை
தேடுகின்றனர் தலைவரை ...
தீட்டப்படும் திட்டங்கள்
திக்கற்ற அபலையாய்
கொட்டப்படும் பணமும்
கொட்டடியில் குப்பையாய் ...
விடிவொன்று தேவையெனில்
முடிவொன்று எடுத்திடுவோம்
மாற்றமும் நிகழ்ந்தால்தான்
மறுமலர்ச்சி நம்வாழ்வில் !
பழனி குமார்