நண்பனும் அவன் நட்பும்
செய்த பல தவறுகளால்
வளமான வாழ்வை
மணற்கடலாய் ,பாலையாய்
ஆக்கிவிட்டேனே என்று
எண்ணி எண்ணி செய்வதறியாது
தவித்திருந்தேன் ;அப்போது
நண்பன் அவன் வந்தான்
மணற்கடலாம் என்
வாழ்வெனும் பாலைவனத்தில்
ஒட்டகமாம் கப்பல் போல்.
கரை சேர்த்து என் வாழ்வை
மீண்டும் சோலைவனமாக்க;
இறைவா,என்னே என் பாக்கியம்
இவன் நட்பில் இன்று
உன்னைக் கண்டுகொண்டேன் நான்