வேண்டும்
இரவின் மடியில்
மழலையாய் ஊஞ்சல் ஆடும்
நிலவைப் போல்
உன் மடி சாய்ந்து
காதல் இளைபாற வேண்டும்
மயில் தோகையாய்
வருடும் உன் விரல்களில்
என் மதி மயங்கி போக வேண்டும்
உன் சுவாச காற்றில்
என் தேகம் மலர்ந்தெழ வேண்டும்
என் விழிகள் விழுங்காத தூக்கத்தை
உன் இதழ்கள் இரு நிமிடம் தர வேண்டும்
நெடு நேர கனவாக
நான் உறங்கிட
நீ காதல் கதை பேச வேண்டும்
உன் கொலுசின் கொஞ்சலை
என் மனம் கெஞ்ச விட வேண்டும்
உன் வலையல் ஓசையில்
என் நாட் திசையும் மறந்திட வேண்டும்
வெட்கம் தழுவிய உன் விழிகள் பார்த்து
என் இருவிழிகள்
புன்னகை மழை
பொழிய வேண்டும்