வள்ளலாய்
யாருக்காக உன் காத்திருப்பு?
எனக்குள் பிறந்த கேள்வியோடு
என் காத்திருப்பு நீண்டது
உறுமீனூக்கோ என்று கேட்காது
உருமீனை காட்ட எனக்கு ஒளி
உமிழ்ந்து உதவிட நினைத்தாயோ?
வள்ளல் நீ வெந்நிலவே!
உனக்கு கீழே நிற்பதால் எனக்கும்
உதவிடும் எண்ணம் உதிக்கின்றதே
உன்னை போல் உதவிட எனக்கொரு
வாய்ப்பு கிடைத்திடுமோ?
வள்ளலாய் நான் மாற வெந்நிலவே?
நா.சேகர்