எம் ஜி ராமசந்திரன் முதலமைச்சர் சாதனைகள்

எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு திட்டம் கொண்டு வந்தார்.

தம் இளமைக் காலத்தில் பசிக்கொடுமை எப்படிப் பட்டது என்பதை முழுமையாக உணர்ந்து, துன்புற்ற அனுபவத்தை எப்பொழுதும் மறவாமல் நினைவில் கொண்டிருந்தார். புரட்சித்தலைவர். அவர் தமிழகத்தின் முதல் அமைச்சரானதும், பசிக்கொடுமையால் அவதியுறக் கூடாது. சாப்பிட உணவு கிடைக்கவில்லை என்பதற்காக எந்தக் குழந்தையும் பள்ளிக்கு வாராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நிறைவேற்றாத முதலமைச்சர் சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினார். ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் 2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் மதியம் ஒரு வேளை பள்ளிகளிலேயே சமைத்து வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களில் உணவு சமைத்து பரிமாற ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ.100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ.200 கோடியாகும்.மக்கள் மத்தியில் இத்திட்டம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

அரிசி விலை குறைப்பு

தமிழகத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்படிருந்த போதிலும் தமிழ் நாட்டில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி விலையை ரூ.1.75 ஆகக் குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 20 கிலோ அரிசியும் வழங்க ஏற்பாடு செய்தார். ஒரு கிலோ அரிசியை இலவசமாகவும் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.

சென்னைக்கு குடிநீர் திட்டம்

சென்னை நகருக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், மக்களாலும் பேசப்பட்டு வந்தது. 1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் கலந்து பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்து விழாவை நடத்தினார்.

இலவச காலணி, இலவச வேலை வாய்ப்பு வழங்கினார். நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், வீட்டு வசதி, திருமண நிதி உதவி, நதி நீர் திட்டம், 20 அம்சத் திட்டம், தாழ்த்தப்பட்டோர்களுக்கு உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, தொழிலாளிகளுக்கு உதவி, அரிசி விலை குறைப்பு போன்ற திட்டங்களை நடைமுறை படுத்தினார்.

மேலும் எம்.ஜி.ஆரின் ஆட்சிகால திட்டங்களின் சாதனை பட்டியல்!

குழந்தைகளுக்கான திட்டங்கள்

1.முதலமைச்சர் குழந்தைகள் சத்துணவு பணியாற்றுவோர்- 1,98,990,
பயன்பெறும் குழந்தைகள்-62,43,662,பாலர் மற்றும் பள்ளி சத்துணவுக் கூடங்கள் 60,000.
2. இலவச சீருடை
3. இலவச பாடநூல்
4. இலவச பற்பொடி
5. இலவச காலணி

முதியோருக்கான திட்டங்கள்

1. மாத உதவித் தொகை
2. நாள்தோறும் மதிய உணவு
3. ஆண்டிற்கு இருமுறை இலவச உடை

வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்

1. வீட்டுக்கொருவருக்கு வேலைவாய்ப்பு
2. படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை
3. கைவினைஞர்களுக்கான கருவிகள்
4. சுயவேலை வாய்ப்பு

மகளிருக்கான திட்டங்கள்

1. விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி
2. தாலிக்கு தங்கம் வழங்குதல்
3. மகளிருக்கு சேவை நிலையங்கள்
4. பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்
5. தாய் சேய் நல இல்லங்கள்

ஏழைகளுக்கான திட்டங்கள்

1. நலிந்தோருக்கான மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டுதல்
2. ஏழை ஏளியவர்களுக்கு இலவச மின்சாரம்

தன்னிறைவு திட்டங்கள்

1. குடியிருப்புகள் கட்டுதல்
2. குடிநீர் வசதி
3. சிறுபாசன ஆதாரங்கள்
4. இணைப்புச் சாலைகள்
5. சிறு பாலங்கள்
6. ஊரக மருந்தகங்கள்
7. ஆதி திராவிடர் மயான சாலைகள்

விவசாயிகளுக்கான திட்டங்கள்

1. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
2. இதர விவசாயிகளுக்கு குறைந்த மின் கட்டணம்
3. கடனை அடைக்கமுடியாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபதி
4. பயிர் பாதுகாப்பு
5. இடுப்போருள்கள் மற்றும் விதைகள் மான்யம்

தொழிலாளர்களுக்கான திட்டங்கள்

1. விபத்து நேரிட்டால் உதவுதல்
2. ஈட்டுறுதியுடன் இணைந்த ஓய்வூதியம்
3. தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்
4. மீனவர் மற்றும் நெசவாளர் வீட்டு வசதி
5. நெசவாளர், பனையேருவோர், தீப்பெட்டி தொழிலாளர் விபத்து உதவி திட்டம்
6. சேமிப்பு மற்றும் நிவாரணம்
7. கட்டிட தொழிலாளர், கிராமக்கை வினைஞர் வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்குவோர் ஆகியோருக்கு ஆயுள் காப்புறுதி மற்றும் பணி ஓய்வு பலன் திட்டம்.

எழுதியவர் : (5-Oct-17, 12:09 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2734

மேலே