வெற்றுத்தாள்கள் வெற்றி தாள்களாக
வெற்றுத்தாள்களை வைத்துக்கொண்டு
விடியும்வரை யோசித்துக்கொண்டே
இருந்தாலும் ஒற்றை கவிதை கூட
தோன்றவில்லை !
விடிந்த அந்த காலைப்பொழுதில்
ஒற்றை பார்வை மட்டும்தான்
வீசினாய் !
வெற்றுத்தாள்கள்
"வெற்றி "தாள்களாக மாறிப்போயின
கவிதை நிரம்பி !