என் காதலன் கண்ணனுக்காக

பார்த்துப்பார்த்து
தலை சீவி;
தலை நிறைய
மல்லிகைப்பூ வைத்து;
நெற்றியில்,
சாந்து பொட்டு இட்டு;
கழுத்தை தொட்டு
ஊஞ்சலாடும் காதணி அணிந்து;
முத்துப் போல
மூக்குத்தியிட்டு;
கண்ணோடு மையும்;
உதட்டினில் சிறுசாயமும்;
கழுத்தை ஒட்டிய
அழகிய நகையும்;
கை நிறைய
கண்ணாடி வளையலும்;
மணம் வீசும்
மருதாணியும்;
பச்சை வண்ண
பட்டு உடுத்தியும்;
நீ வருவாய் எனக் காத்திருக்கிறேன்,
என்னை மணமுடிக்க!!!!!!

எழுதியவர் : பானுமதி (15-Oct-17, 3:05 pm)
சேர்த்தது : மதி
பார்வை : 150

மேலே