உன் நினைவு காயங்கள்
பெரு அலைகள்
அதில் தத்தளிக்கும்
சிறு ஓடம் போல் - காதலே
உன் நினைவுகள்.......
கூந்தல் கோதிட்ட விரல்கள்
நகக்கண்களை குத்திக்கொண்டு...
பேனா முனை கிழித்திட்ட காகிதம் போல்
குருதி குறைந்து எழுதி மாய்கிறது
என் கவிதைகள்....
உன் விழிகளில் பாய்ந்த
என் காதல் அம்புகள் - இன்று
என்னை மோதி மோதி சாகிறது...
சிரிப்பின் சுவரம் குறைந்து
மௌன மொழியில் பேசியும்
என் நாட்கள்.
காயம் கண்ட இதயம்
இருந்தும்
உன்னை மட்டும் மறப்பதில்லை....
உன் பாதைகள்
என் விழி அறைகளாய்
உன் வருகை மட்டும் பதிவு செய்து...
கடல் அலைகள் அடியில் உள்ள
நிலவின் பிம்பம் போல்
யாரும் அறியாமல் போகிறது
என் சோகங்கள்....
ஊசியில் நுழையும் நூல் போல்
என் மனதில் மெல்ல நுழையும்
உன் நினைவுகள்
என் காயம் மட்டும் தைக்கப்படாமல்...
என்னோடு வந்துவிடு காதலே!!!
மருந்தாக அல்ல - என்
ஆரோக்கியமாய்....
-மூ.முத்துச்செல்வி