தீராத
தினம் தினம்
இவன்
உள்ளம் காணும்
வலிகளை.....வரிகளில்
சொல்லிவிட
இந்த
வாழ்வும்
போதாது.....!!
வலிகள்
நிரம்பிய
வாழ்க்கையை
திரும்பியும்
பார்க்காத
திமிருக்குப்
பெயர்தான்
தீராத
வலி.....!!
துன்பங்கள்
அழிந்தது
தூய்மையான
பொழுது.....
துயில்
எழுந்த
ஒளியே......
தீபாவளி......!!
என்
மனம்
தானாக
ஆறுமென்று
நான்
கொண்ட எண்ணமெல்லாம்
ஏமாற்றமாய்
மாறிப்போனது......!!
நீயும்
நானும்
கலந்து
வாழ்ந்திடுவோம்
என்ற
நினைப்பும்
கலைந்தே
போனதே.....வர்ணங்களும்
வரிசை
மாறிப்போனதே......!!
சோலைக்குள்
சுகங்களும்
சோகங்களும்
சொல்லிமகிழ்ந்தோம்
இன்று
சொல்லிக்கொள்ளாமல்
எங்கேயோ
போய்த்
தொலைந்தோம்.......!!
விழியெனும்
அருவியில்
விதியை
நினைத்து
நனைந்தேன்.....
விந்தை ஆன
உலகை
ரசிக்காமல்
விலகிநின்றேன்......!!
தீப ஒளியில்
இருள்
அகலும்.....
அந்த சூரிய
ஒளி பட்டு
இந்த
புவியும்
சுழலும்.....அதுபோல்
நம்
சோகங்களும்
சுகங்களும்
மறுபடி
நம்மைச்
சுற்றுமடி.....இதுதான்
நம்
வாழ்க்கையின்
உண்மையடி......!!!