வாழ்க எம் தாயே செந்தமிழே
தமிழன் வீழ்த்தப்பட்டதும் , வீழ்ந்ததும் தமிழனாலே...
(உன்னை தமிழன் என்று சொல்வதே கேவலம்.உலகத்தான் தரும் எலும்புத் துண்டுகளுக்காக .காட்டிக் கொடுப்பவன்...எம்மண்ணை அழிப்பவன்.
தமிழனா?
தன் தாய்மொழி தமிழை...
தன் மண்ணை ...தன் தாயை...
அனைத்து உயிர்களையும் மதிக்கும் மனிதனே ...தமிழன்(தமிழச்சி) )
(எம் அடையாளங்களை மறைக்கப் பார்க்கும்.. அபகரிக்க பார்க்கும்...அழிக்கப் பார்க்கும்
உலக மேதைகளே...
நீங்கள் மனிதர்கள் தானா? )
எம் இனம் வீழ்த்தப்பட்டதும், வீழ்ந்ததும், வீழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பதும் எம் இனத்தானின் உதவியாலே.
ஒருவனை
பல பேர் சேர்ந்து (உலகமே இணைந்து)
ஒரே நேரத்தில்
முதுகில் குத்துவது வீரமல்ல...
புற முதுகில்
குத்துவது
உமக்கு வேண்டுமானால்
வீரமாக இருக்கலாம்...
கடைசி வரை வீரத்தோடும் அறத்தோடும் போரிட்டு வெற்றி பெறுவது.
இல்லை என்றால் பயந்து புறமுதுகிட்டு ஓடாமல் .
நின்று இறுதி வரை தைரியத்தோடு போரிட்டு.
மார்பில் வேல் தாங்கி வீரத்தோடு இறப்பதே
எமக்கும்
என் தாய்க்கும் பெருமை...
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டு...
நீங்கள் எங்களை எந்தளவிற்கு கீழே அழுத்துகிறீர்களோ
அந்த அளவிற்கு நாங்கள் மேலே எழுவோம்...
ஆதி மொழியை
உன்னால் அல்ல...
எவராலும் அழிக்க முடியாது.
அனைத்து மொழியையும் மதிக்கிறோம்...
எம் தாய்மொழி தமிழ்மொழியை உயிராக எம் அடையாளமாக போற்றுகிறோம்...
யுகங்கள் கடந்து
என்றும்
பிரபஞ்சத்தில் செம்மையாக
வாழ்வாள்...எம் தாய்...
எம் தமிழ்த்தாய்...
#தமிழ்
#வாழ்கசெந்தமிழ்
செடி வந்து முளைக்க
களை வந்து முளைத்தது
நடுவில் எம் மண்ணில்.
#துரோகம்
#துரோகிகள்
#அரசியல்வியாதிகள்
#அரசியல்பிழைத்தோர்க்குஅறமேகூற்றாகும்
நீ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்
ஆனால் நீ தமிழ் என்பதை மறவாதே...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து