நட்பு

அறியாத இடம்
அறிந்து கொள்ள துடிக்கும் மனம்
புரியாத விழிகளுடன் இருக்கும்
என் விழிகள் பார்த்து பேசுபவன்
நண்பனாகிறான் ....
அவனருகில் அருந்தும் டீயில் கும்மாளம் நிறைந்தது ...
அலைமோதும் கூட்டத்திலும்
பாதுகாப்பின் வளையத்தினுள் உணர்கிறேன் உனதருகில் நண்பா ....
தாயின் அன்பு ,தந்தையின் திட்டு,சகோதரர்களின் பாதுகாப்பு
ரத்த உணர்வு இல்லாத உன்னிடம் உணர்கிறேன்
அதன் பேர் நட்பு ..........

எழுதியவர் : (20-Oct-17, 1:16 pm)
Tanglish : natpu
பார்வை : 320

மேலே