என் காதல் கவியே

👨🏻ஆண்: கண்ணாலே கண்டேனே நம்காதல் ஆயுளை...
👩🏻பெண்: உயிராக கொண்டேனே உன்நினைவின் சாயலை...
ஆ: நான் கரைய வேண்டும் உன்னிலே,😆
பெ: நீ நிரம்ப வேண்டும் என்னிலே,😄
ஆ: நம் காதல் கோர்க்க காலம் போதுமா???😇

பெ: கனவோடு வாழ்ந்த
நாட்கள்கள் நீளும்,
நனவாகி நீயும் எனை அள்ளும்போதும்...😝
ஆ: இமைக்காமல் நானும் உனைகாணும் நேரம்,
ஒளிந்திருந்த உயிரும் உனைவந்து சேரும்...😛
பெ : கண்கள் நெருங்குதே...👀
என் பெண்மை பதுங்குதே...☺
ஆ: நாம் தொலைய வேணும்
காதல் ஊரிலே...😚

ஆ: இரவாக நானும்
உறங்காமல் நீயும்,
புதுவாழ்வை தேடி தொலைவோமா பாதி...😆
பெ: உன்மீசை கூசும்
காதோடு பேசும்,
நான் விலகும்போது
உன்பார்வை ஏசும்...😉
ஆ: கவிதை எழுதுவேன்...😍
உன் நாணம் விலகினால்...😘
பெ: உன்னில் புதைந்து
போன உயிரும் நானடா...😇

@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (20-Oct-17, 9:16 pm)
Tanglish : en kaadhal kaviye
பார்வை : 370

மேலே