பாதியில் நின்றாய்
வசந்தம் வந்ததாய்
பூத்த மனம்
வாடுதே.....
வந்த இடம்
திரும்பியதால்...
கருங்கல்லாய்
இருந்தவனை கைபிடித்து
சென்றவளே...
கல்லிவனென்றே
செதுக்கிட முற்பட்டயோ...
வலிகொண்டேன் உன்னால்...
வெகுநாளாய் வறண்ட பூமியில்
மழையாய் வந்தாய்...
புயலாகி போனாயே...
உன்னிடம் எதிர்பார்ப்பேதும்
வைக்கவில்லையே..
வாழ்வின் எல்லைவரை
வருகிறேன் என்றாயே...
வெகுதூர பயணமென்றா
பாதியில் நின்றாய்...
பிரிவெனும் ஆற்றில்
வீழ்ந்து தனிமையெனும்
கடலில் தத்தலித்தவனை...
அன்பெனும் ஓடையில்
அரைகுறையாய்
நனையவிட்டு போனாயே..