உன்னருகே நான் வேண்டும்

அந்தி மாலை எழுந்து வந்தது
நிலவு விழித்து சோம்பல் முறித்தது
சில்லென்ற வீசும் குளிர்க் காற்று மேனி தழுவ
பட்சிகள் ரீங்காரம் மனதைத் தொட
மலைமுகடு மேலிருந்து வரும் ஆறு சலசலக்க
நதிக்கரை பசும்புல் பூ மெத்தை
மலர்கள் தரும் சுகந்தம் மனம் வந்து நிரப்ப
குயில் பாடும் சுக ராகம் செவி இனிக்க
நிலவொளி பட்டு பொன்னொளிரும் உன் பூவுடலருகே
நானிருந்து எனை மறந்தால் அது போதும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (22-Oct-17, 3:54 pm)
பார்வை : 293

மேலே