மழை இல்லாத மேகம்
நீயின்றி
நான் நானாகயில்லை.....!
தூங்காத விழிகளை
வதைக்கும்
வராத உனது வருகைக்கான
எதிர்பார்ப்புகள் ....!
மனதில் ஏக்கங்களை
தாங்கிக்கொள்ள முடியாது
புலம்புகிறேன்
உனது கால்தடத்திடம்...!
பொய்யாகவே
நம்ப மறுக்கிறது
உனது வெறுப்புகளை
மனம்,....!
ஒவ்வொரு காலை
முகம்கழுதலின்போதும்
உனது நினைவுகளை போல்
சிதறிய நீர்துளிகளை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்....!
நூலகம் செல்லாத
புத்தக வாசிப்பாக
எனது அறைக்குள்
உனது நினைவுகளை
படித்துக்கொண்டிருக்கிறேன்.....!
உனது முதற் தொடுகையில்
என்னை மறந்திருந்தேன்....!
கைகளின்
வற்றிபோகாத
உனது அன்பின்
ஈரம்....
ஒவ்வொரு தொடுதலில்
நமது காதல்
பெருகி வழிகிறது ......!
திட்டு திட்டாக எனது
வானத்தை
மறைக்கும் உனது
நினைவுகளில் ஊறிய
மேகங்கள்
மழைக்கு பதில்
கண்ணீரை பொழிகிறது....!
இந்த கவிதையைபோலதான்.