உன்னோடு நானிருக்க வான்வெளியும் கைவசமே

எண்ணில் கரைந்த
இன்னுயிர் மனைவியே...!
வெண்ணிலா பொன்னொளிருதோ?
ஒன்றாய்நாம் குலாவிட?

மஞ்சள் நிலவும் தூரமில்லை
மானேநீ என்னோடு நடக்கையிலே...!

இரவோடு நிலவாய்
நிலவோடு குளிராய்
குளிரோடு பனியாய்
பனிவிழும் மலராய்
மலர்உடுக்கும் தோளாய்
தோள்சாய்க்கும் ஆளாய்
உன்னோடு நானிருக்க
வான்வெளியும் கைவசமே...!

எழுதியவர் : காசி.தங்கராசு (3-Nov-17, 4:04 am)
பார்வை : 83

மேலே