உன் பார்வைகளை மட்டும் பரிசாய்
கொஞ்சும் குமரி நீ
கோலமயில் போல
நடந்து வருகிறாய் !
கோடிபூக்களின் தரிசனம்
குமரி உன் முகம் பார்த்து
குளிர்ந்து போகிறேன் அகம் முழுதும் நான் !
கொடியிடை ஒன்றில்
கனி இரண்டு கண்டு விழி இரண்டும்
உருண்டு உருண்டு உள்ளமெல்லாம்
உருகி கவி பல பாடு என்று உருகி மருகி
வாடித்தான் போகிறேன் நான் !
கண்ஜாடை காட்டியே கவி பல எழுத
உத்தரவுகள் பிறப்பித்து விடுகிறாய் !
கன்னிப்பெண் உன் முகம் காண காத்திருந்த
பொழுதுகள் எல்லாம் கவிதைகளுக்காய்
செலவிட்டே கழிந்து போனதடி !
காதருகே வந்து கொஞ்சம் காதல் சொல்லி
கவிதை ஒன்றை பரிசாய் வாங்கி விட்டு போ !
காலமெல்லாம் உன் மடி சாய்ந்து துயில் கொள்ளும்
வரம் ஒன்றை எனக்கு தந்து விட்டு போ !
என் காதலும் ,கவிதையும் கடல் போல்
பெரிதாய் சேர்ந்து கிடக்கு என் உள்ளத்தில்
உன்னிடம் தந்து விட !
உன் பார்வைகளை மட்டும் எனக்கு நித்தம்
பரிசாய் தந்து விட்டு போ !