தமிழ் பற்று என்ற பெயரில் ஜாதிய வன்முறை

சமத்துவமாய் ஓன்று சேர்ந்து,
சகோதரனாய் இணைந்து போராடி,
தங்கைக்கு வீரம் கற்றுக்குடுத்து ,
அவளுக்கு வேலுநாச்சியார் என்று பெயர் சூற்றி,
வெள்ளையனை தலைகுனிய வயித்து,
நீட்டமாய் கம்பம் நட்டு,
சுதந்திரமாய் மூவர்ணத்தை பறக்க விட்டு,
வீர மீசையை முறுக்கி கூவினோம்
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று,
இன்று காவிய வேட்டிகளால் பிரிந்து ,
மூளை சுட்ட செங்கல் போன்று வறண்டு,
அரசியல் என்ற வார்த்தையால் பிரிந்து ,
தமிழ் பற்று என்ற பெயரில் ஜாதிய வன்முறை ஏற்படுத்தி ,
இன்று தனித்தனியாய் பிச்சை எடுக்கிறான்,
ஒருவன் தண்ணீர் என்று , மற்றவன் உணவு என்று.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (6-Nov-17, 11:00 am)
பார்வை : 144

மேலே