யாருமில்லை

இரவு தூங்கும் நேரத்தில்
இனிய கனவு பூத்ததடி!
பரம சுகத்தில் திளைத்திருந்தேன்
பார்த்த யாவும் மறந்ததடி!
வரவில் சிலிர்த்தேன் வெண்ணிலவே
வருடிச் சென்றாய் ஒளிவீசி!
உரிமை யோடு கதைபேச
உன்னை யன்றி யாருமில்லை!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (7-Nov-17, 9:19 pm)
Tanglish : yarumillai
பார்வை : 84

மேலே