நான் கவிஞன் ஆனேன்

போதி மரத்தின் கீழ் அமர்ந்தேன்
புத்தனாகவில்லை !
ஆல மரத்தின் கீழ் அமர்ந்தேன்
ஞானி ஆகவில்லை !
மீதி மரங்களின் கீழெல்லாம் அமர்ந்தேன்
எந்தத் தெளிவும் பிறக்கவில்லை !
சாலையோரத்து மரங்களின் நிழழ்ல்களில்
தென்றலுடன் கை கோர்த்து நடந்தேன் ...
கவிஞன் ஆனேன் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-17, 4:32 pm)
Tanglish : naan kavingan aanen
பார்வை : 117

மேலே