நான் கவிஞன் ஆனேன்
போதி மரத்தின் கீழ் அமர்ந்தேன்
புத்தனாகவில்லை !
ஆல மரத்தின் கீழ் அமர்ந்தேன்
ஞானி ஆகவில்லை !
மீதி மரங்களின் கீழெல்லாம் அமர்ந்தேன்
எந்தத் தெளிவும் பிறக்கவில்லை !
சாலையோரத்து மரங்களின் நிழழ்ல்களில்
தென்றலுடன் கை கோர்த்து நடந்தேன் ...
கவிஞன் ஆனேன் !
-----கவின் சாரலன்