முதல் பாடல்

என்னுடைய முதல் பாடல்...
படம் பெயர்: யாக்கை
பாடல் : நான் இனி காற்றில் மிதக்கப் போகிறேன்........ (இப்பாட்டின் இசைக்கு,நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.)

காதல் பாடல்.எனது மனக்கவிஞர் பாரதிக்கும்;அவரது தமிழுக்கும் இப்பாட்டினை சமர்ப்பிக்கின்றேன்...

பாடல் பற்றிய கருத்தை முடிந்தால் பகிரவும்,எனது நட்புகளே.!!!



பாடல்:

நான் , இங்கு உன்னை மட்டும் நினைக்கிறேன்;
கூடவே உன் நினைவை மனதினில் சுமக்கின்றேன்;
இந்த உலகம் முழுவதும்,
நம் இருவர்க்காக தான்;
இங்கு நீயும் நானும் தமிழும்இசையும்
இயற்கையோடு சேர்ந்து வாழலாம்.....


நினைத்து நினைத்து அழுகும் ,
சிறு குழந்தைப் போல ஆனேன்;
உன்னைப் பிரிய நினைக்கச் சொன்னால், 
நான் இறந்தும் கூட போவேன்!!! 

உன் பார்வை போதுமே,
உன் மனதை உணருவேன்!
ஒரு வார்த்தை சொல்லடா,....
என் பேச்சில்,மூச்சில்
உன்னை மணந்து
சாவேன்;வாழ்வேன்.....

கொட்டும் அருவியும்;வெற்றுப் பாறையும்
சேர்ந்ததுப் போல்....
உந்தன் பாசமும்;வெறுப்பும்
கொல்லுதடா,
உன்னையே என் மனம் தேடுதடா....
இது துன்பமும் இல்லாத ; இன்பமும் இல்லாத
ஓர் நொடி...

ஓர் நொடி...
சொல்,உன் ஒரு சொல் ,
அந்த சொல்லிற்கு உலகினில் நிகர் ஏதடா...
நீ எந்தன் தலைமகன்;தமிழிசை;சந்திரன்;
கருவிழி கனவெல்லாம் நீயே!!!!
இயற்கையும் நீ;இனியெல்லாம் நீ...
என் தாயாக மாறிடும் , தோழனும் நீதானே...
கண்ணம்மா போலானேன்;
உன் கருத்துக்கு செவிச்சாய்த்தேன்..
உன் தமிழினாலே!!!!



நினைத்து நினைத்து அழுகும் ,
சிறு குழந்தைப் போல ஆனேன்;
உன்னைப் பிரிய நினைக்கச் சொன்னால், 
நான் இறந்தும் கூட போவேன்!!! 

உன் பார்வை போதுமே,
உன் மனதை உணருவேன்!
ஒரு வார்த்தை சொல்லடா,....
என் பேச்சில்,மூச்சில்
உன்னை மணந்து
சாவேன்;வாழ்வேன்.....

அந்திமாலையில்,
என் கண்கள் முழுதும்,உன் தேடல்...
கொஞ்சம் நடுவில் ,
என் இதயம் விரும்பும் ,உன் பாடல்...

உனது இசையை உணர்ந்து,
தமிழை ரசிக்கும் ,அந்த தருணமே...
என் கவலை மறையுமே..
என்னோட உயிரும் நீ!!!!

செதுக்கி எடுத்த சிலைப்போல்,
உந்தன் தமிழில் மறந்து நின்றேன்....
உந்தன் தமிழில் என்னை கலந்து
உன் நினைவை மட்டும் சுமந்தேன்...

உன் பார்வை போதுமே,
உன் மனதை உணருவேன்!
ஒரு வார்த்தை சொல்லடா,....
என் பேச்சில்,மூச்சில்
உன்னை மணந்து
சாவேன்;வாழ்வேன் நானே......

எழுதியவர் : பானுமதி (15-Nov-17, 11:24 pm)
சேர்த்தது : மதி
Tanglish : muthal paadal
பார்வை : 766

மேலே