இந்தஉலகம்
இந்தஉலகம்.....
============================ருத்ரா
யார் சொன்னது
இந்த உலகம் எல்லாம்
"சந்தோஷத்தால்"
செய்யப்பட்டிருக்கிறது
என்று?
இதன் அடியில்
ஒரு ரொட்டித்துண்டு
நசுங்கிக்கிடக்கிறது.
அதை நோக்கி நீட்டிய நாக்குகளாலும்
பசித்த வயிறுகளாலும் தான்
இந்த உலகம்
மிடையப்பட்டிருக்கிறது.
=================================