நானும் ஏமாளி தான்

அரசாங்க பேருந்தில்...
மாணவர்களுக்கு அரசு
அளிக்கும் சலுகை,
கட்டமில்லா பஸ் வசதி...!

மூன்று மணிக்கு கல்லூரி ஓய்ந்தாலும்,
பத்து ரூபாயைக் காப்பாற்ற,
ஆறுமணிவரை தினமும்
அரசு பேருந்திற்கு காத்திருப்பது சுகமே...!

அந்தி மாலைவேளை – ஒருநாள்
முகம் நிறைந்த சோகத்தோடு,
பார்ப்பவர்களை பரிதாபம் கொள்ளச்செய்யும்
எளிமையான தோற்றத்தோடு,
எந்தன் எதிரே தோன்றிய
நாற்பது வயது பெண்மணியின்,
பரிதாபக் குரல் எந்தன் செவிகளை சேர்ந்தது...!

“திருநெல்வேலி வரை செல்லவேண்டும்
பணத்தை எங்கேயோ தவறவிட்டேன் – என்று
தேம்பி தேம்பி சொல்லிமுடித்தார்.”

எந்தன் உள்ளமும் சற்று இளகித்தான் போனது...!

பாஸ் பஸ் வராவிட்டால் மட்டும் தேவைக்கு,
கை சேமிப்பு இருபது ரூபாய் இருந்தது...!
முப்பது ரூபாய் இருந்தால் தான்,
செல்லமுடியும் என்பதை உணர்ந்து...!!
நண்பர்களிடமும் வசூலித்து,
நாற்பது ரூபாய் கொடுத்து அனுப்பினேன்...!!!

ஏதோ சாதித்தது போல் சந்தோஷத்தில்,
பேருந்தில் ஏறிப் புறப்பட்டேன்...!

இரண்டு நாட்கள் கழித்து மீண்டும்,
கூட்டத்திற்கு நடுவே அதே குரல்...!

“திருநெல்வேலி வர செல்லவேண்டும்
பணத்தை எங்கயோ தவறவிட்டேன் என்று.”

முதுகின் பின்புறம் நின்று கேட்பவளின்,
முகம் பார்க்க முகத்தை திரும்பினேன்...
முகத்தில் அணுவும் அசையவில்லை அவளுக்கு...!
முகத்தை திருப்பி வேகமாய் கடந்துவிட்டாள்...!!

நண்பர்களின் ஏளனச் சிரிப்பு என்னை,
எள்ளி நகையாடியதை தெளிவாய் விளங்கியது...!

“ஏமாற்றுக்கார உலகில் நானும் ஒரு
ஏமாளி என்பதை உணரவைத்துவிட்டாள்..!”

வாழ்கை ஒளிந்துதான் கிடக்கிறது – அது
கற்பிக்கும் ஒவ்வொரு பாடங்களிலும்...!!

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 8:47 pm)
சேர்த்தது : ஜெர்ரி
Tanglish : naanum yemali thaan
பார்வை : 3173

மேலே