எது மெய்யோ
பனிக்குடம் உடைந்து
வந்த மெய்...
மண்குடம் உடைந்துப்
போகிற மெய்..
வருகைக்கு இரு கை
துணை...
முடிவிற்கு நான்கு கை
துணை...
எதுவும் மெய்
இல்லை....
எதுவும் நிலை
இல்லை....
இதுதான்
இயற்கையெனில்
எதுதான்
மெய்யோ????
- மூ.முத்துச்செல்வி