எது மெய்யோ

பனிக்குடம் உடைந்து
வந்த மெய்...
மண்குடம் உடைந்துப்
போகிற மெய்..

வருகைக்கு இரு கை
துணை...
முடிவிற்கு நான்கு கை
துணை...

எதுவும் மெய்
இல்லை....
எதுவும் நிலை
இல்லை....

இதுதான்
இயற்கையெனில்
எதுதான்
மெய்யோ????

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (17-Nov-17, 10:48 am)
பார்வை : 125

மேலே