உள்ளமும் நீந்தும்

கரைபுரண் டோடும் காவிரி யாற்றில்
***கயலுடன் உள்ளமும் நீந்தும் !
நுரையுடன் அலைகள் மேனியைத் தழுவ
***நொடியினில் இதயமும் பூக்கும் !
இரைச்சலும் கூட இருசெவி களிலும்
***இன்னிசை யாகவே கேட்கும் !
விரைத்திடும் வரையில் நதியினி லாட
***விழைந்திடும் ஆசையி னாலே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Nov-17, 11:42 am)
பார்வை : 96

மேலே