ஆர்மோன்களின் இசை
உன்னை என் மார்பில் சுமக்கும் வேளை...
எனக்குள் நடக்கும் விந்தையான உணர்வை எப்படி சொல்வேன்...
ஆர்மோன்கள் மார்பில் வழிகிறது
எந்தன் முதற்பிள்ளை உன்னை அணைத்துக் கொண்டே இருந்திட சொல்கிறது.
காற்றில் மிதப்பதும்
நீரில் பறப்பதும்
ஆடையை மறப்பதும்
உன்னை அணைப்பதும்
என்னை இழப்பதும்
உன்னை மீட்பதும்
நாம் நம் காதலை மீட்டுவதும்
நேரம் தேன் சிந்தும் பொழுது
நாமும் சிறு துளி குடிப்போமா!...
~ பிரபாவதி வீரமுத்து