மத்தியம் நம்மை மட்டம் தட்டுதே

துரோகம் தான் செய்கிறது தமிழுக்கு
இந்த ( இந்தி ) ய அரசு

வீரம் மிக்க தமிழ் அரசு
பூவாய் மாரி பல நாள் ஆச்சு

அனிதா அழுகைக்கும் இறங்காமல்
தமிழனை மாற்ற பாக்குது மருத்துத்துவம் இல்லாமல்

மீனுக்கு இந்தி தெரியாததால்
சுட்டு தள்ளுது ( இந்தி ) ய அரசு

கருமை எல்லாம் வெண்மையென்று மாறியதாய்
பெயருக்கு சொல்லுது ( இந்தி ) ய அரசு

போர்களை வெறுக்கும் அமைதி படை இதில்
ஈழத்தை கொன்றதும் சரிதானா ?

பூரி வாங்க மொழி எதற்கு
இதில் இந்தி திணிப்பும் முறைதானா ?

வேளைக்கு ஆள் -- வெளியூர் தேடலா
இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தெரியாத!!

மதில் சுவரை எட்டிப்பார்க்ககூட நேரம் இல்லையா
( இந்தி ) ய விவசாயத்தில் எங்களுக்கும் பங்கு இல்லையா ??????????

எழுதியவர் : வான்மதி கோபால் (22-Nov-17, 4:42 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 325

மேலே