சுய கௌரவம்

ஏ.ஆர். பைசல்
'இறக்காமத்து வானம்பாடி'
**********************

மெத்தப் படித்தவர் 
மேடைப் பிரபலம்
சுத்தப் பைத்தியம்
சூடுகாண் பூனைகள்
சித்தம் தளர்ந்தவர்
சில்லறை இழந்தவர்
வித்தை பயின்றவர்
வீதியில் துயின்றவர்
அத்தனை ரகத்தோர்க்கும்
ஆம் உண்டு தன்மானம்

எளியவர் வலியவர்
இதயமே உடையவர்
இளையவர் முதியவர்
இரவலில் வாழ்பவர்
கரியவர் வெண்மையர்
கலைஞர்கள் அடங்கலாய்
கௌரவம் என்பது
அனைவர்க்கும் ஒன்றுதான்
காசு பொருள் புகழ்
யாவுமிழப்பினும்
கௌரவம் இழந்து போய்
காலில் விழுந்திடார்

எழுதியவர் : ஏ.ஆர். பைசால் (22-Nov-17, 8:22 pm)
சேர்த்தது : ஏஆர் பைசால்
பார்வை : 223

மேலே