இல்வாழ்க்கைக் காதலி
என் வாழ்வில் கிடைத்த ஒப்பில்லாத காரிகையே
என் இருண்ட நிகழ்காலத்தை ஒளியாக்கிய தாரகையே
என் எண்ணங்களை நனவாக்கிய தூரிகையே
என் திட்டங்களுக்கு உயிரோட்டம் கொடுத்த பேரிகையே
எந்நாளும் நீ எனக்கு படைத்து பரிமாறுவது அமிர்தம்
நீ என் வாழ்க்கைத்தணையாய் கிடைத்தது எந்தன் சுகிர்தம்
இந்நாள்வரை நாம் மகிழ்வுடன் இருப்பது உந்தன் சூத்திரம்
என் எதிர்காலத்தை பொலிவாக்குவது, உன்னால் மட்டுமே சாத்தியம்
எத்தனை முறை என் நெஞ்சில் உதித்தது கேள்வி?
அவ்வனைத்திற்கும் எனக்காய் செய்வாள் வேள்வி.
உன்னைக் காணாதவரை என் வாழ்வில் இல்லை சுபக் கதை
நீ வந்த நாள் முதல் நான் படித்துக் கொண்டிருப்பது கீதை
ராரே