காலில் மட்டுமா
பாதை ஓரங்களிலெல்லாம் உணவகங்கள்
பசித்தவனுக்கு உணவில்லை
காரணம் கையில் பணமில்லை .
பாதைக் கடைகளிலெல்லாம் தண்ணீர் பாட்டில்கள்
தாகத்திற்கு தண்ணீர் இல்லை ஏழைக்கு
காரணம் காஸ்டலி .
பாதைக் கடைகளில் தொங்கும் பழக் குலைகள்
பசித்தவனுக்கு ருசிக்க பணமில்லை
துட்டு உள்ளவன் ருசித்துப் புசித்து
விட்டெறிந்த தோலியில் வழுக்கி விழுந்த ஏழைக்கு
காலில் மட்டுமா காயம் ?
மனதிலும் தான் !