உண்மைக்காதல்
மூன்றெழுத்தில் ஒரு மனம் தொலைத்து இன்னொரு மனம் திருடும் போராட்டம்
மாயம் இல்லை
யாருக்கு யார் மீது என்பதல்ல
உனக்கான உன்னதமானவர் மேல் வரும்
எப்படி வந்தது யாரும் அறியார்
வேண்டாம் என விலகினாலும் மறைக்க இயலாது
காவியக்காலம் முதல் கம்பியூட்டர் காலம் தாண்டியும்
இரண்டு கண்கள் பார்க்கும்
நான்கு கண்களாக மாறும்
கெஞ்சிப் பேசும்
கொஞ்சம் பேசும் அப்புறம் கொஞ்சிப் பேசும்
கவிதை பொழியும் மௌனங்கள் பேசும்
மணிகள் நொடிகளாகும்
காணாது தவிக்கும்
கண்டதும் இனிக்கும்
கனவுகள் காணும்
நனவாக்க முயலும்
ஆ மைய பரி வும்!!!
அகரம் தாண்டும்???