வழியறிந்த கிள்ளையவன்

ஆதவன் மறையும்
அந்திப் பொழுதில்
இல்லம் திரும்பும்
இருகாளை ஊர்தியில்
பிழைக்கச் சென்றவர்
உழைத்தக் களைப்பில்
ஒருபுறமாய் சாய்ந்திட
வாரிசாகப் பிறந்தவன்
லாவகமாய் செலுத்துவது
பாவமாகத் தெரிந்தாலும்
பக்குவமாக பழகுகிறான்
பாடமாக படிக்கின்றான்
தந்தையை அமரவைத்து
தன்கடமையை ஆற்றிடும்
நெறிதவறா பிள்ளையவன்
குறிதவறாது இலக்கடையும்
வழியறிந்த கிள்ளையவன் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Nov-17, 7:41 am)
பார்வை : 177

மேலே