உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு

உயிருக்கும் உலகுக்கும் ஆபத்து பட்டாசு..!
==================================

பாட்டெழுதிக் குவித்தார்கள் பாவலரும் கவிஞரும்..
..........பஞ்சம் பசிபட்டினி வறுமை கொடுமைபற்றியே.!
நாட்டில் நடக்கும் அநியாயதையும் அவலத்தையும்..
..........நம்பிய மக்களுக்கு நயம்படப் புரியவைத்தார்கள்..!
பட்டாசு வெடிப்பதாலே பயனென்ன என்பதையும்..
..........பலருக்கும் புரியும்படி பகலிரவாய் எழுதினார்கள்.!
கேட்டவரால் புவிகொரு பயனுமில்லை இன்னும்..
..........கெடவைக்கிறார் ஓசோனையும் காற்றுவெளியையும்.!


ஏட்டுக் கல்வியென்பது ஏழைக்கு எட்டாக்கனியாகும்..
..........இலவசக்கல்வி என்பது இன்னும் ஏட்டளவிலேதான்..!
ஓட்டு கேட்கும்போது உங்களுக்கும் வழிபிறக்கும்..
..........என்பார்.! அதன்பிறகு அடுத்தமுறைதான் வருவார்.!
வீட்டுத் திண்ணையிலே அமர்ந்து வெடிசுத்துகிறோம்..
..........விதியை நொந்து படிக்கமுடியாமல் போராடுகிறோம்.!
பாட்டுகொரு புலவன் மாகவிபாரதியும் இதைத்தானா..
..........புண்ணியம்கோடி ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்.?


ஆட்டுக்குட்டி மாடுகன்னு வளர்த்தாலும் ஆயுளாவது..
..........அதிகரிக்கும் இத்தொழிலோ உயிருக்கே உலைவைக்குது.!
ஓட்டுப்போட்ட மக்களால் மிகஉயர்வுக்குச் சென்ற..
..........அதிகாரியே முறையின்றியிதைச் செய்ய அனுமதிப்பது.!
பட்டாசு ஆலைகளும் ஆவணமின்றி முளைக்கிது..
..........பசும்பிஞ்சுகளும் பட்டாசோடு சேர்ந்து சாம்பலாகுது.!
அட்டபந்தன விழாவில் அனுமதியின்றி கொல்லத்தில்..
..........ஆயிரம்வாலா வெடித்ததில் ஐநூறுபேரையது கொன்றது.!


குடிக்காதே புகைக்காதே எச்சரிக்கிறது அரசாங்கம்..
..........குடிபுகை இரண்டையும் மறந்துவிடு அவைநலமில்லை.!
குடித்தலும் புகைத்தலும் உடல்நலத்துக்கு தான்கேடு..
..........வெடிக்கும் பட்டாசோ வேறுலகுக்கு அனுப்பிவிடும்.!
வெடிதயாரிப்பதை உரிமமின்றிச் செய்கின்றார் பலர்..
..........விதிகள்பல இதற்குண்டு பின்பற்றுவோர் யாருமில்லை.!
வெடித்து உயிர்கருகியபின் விபத்தென்பார் இதுகூட..
..........படித்த மாந்தர்களுக்கும் புரிவதில்லை..“இந்தமாயை”.!
==========================================================

வல்லமை படக்கவிதைக்காக எழுதிய கவிதை

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (1-Dec-17, 8:46 pm)
பார்வை : 63

மேலே