காதல் துளிகள்
நீ என் மார்பில்
உறக்கம் கொள்ள
என் இதயத்தையும்
ஒரு நோடி
நிறுத்தி வைப்பேன்!......
நீ! உன்
கூந்தலில் சூட
மலர் கேட்டால்
என் உயிரையும்
ரோஜாவாக்குவேன்!.....
என் இதயத்தை
திருடிய திருடியே
நான் காவலன்
ஆனாலும் என்
இதயத்தை உன்னிடமிருந்து
பிரிக்கமாட்டேன்!......
உன் கூந்தல்
என்னை சூட
தவியாய் தவிக்கிறது
மலருடன் நான் வந்தால்
என் முகம்
வேர்த்து கொட்டுகிறது !......
என் மனமெனும்
குளத்தில் பூத்த
தாமரையே !....
நீ சூடும் மலராய்
நான் மலர்வது எப்போது !.....
என் உடலை விட்டு
கூட ஓர் நாள்
உயிர் விட்டு போகும்
ஆனால் உன்
நினைவுகள் என்றும்
என்னை விட்டு பிரியாது !......
என் மனமெனும்
தோட்டத்தில் பூத்த
மல்லிகையே !....
என் தோளில்
மாலையாய் விழுவது
எப்போது !......
உன் அழகால்
என்னை ஆட்சி
செய்பவளே !....
உன் ஆட்சியில்
ஒரு தொகுதியே
எனக்கு கொடு !......
தொடராய் போகும்
உன் நினைவுகளுக்கு
என் மரணம் தான்
முடிவாக அமையும்
என நினைக்கிறேன்!.....