புனிதம்

என் பெண்மையின்
மென்மைக்கு மேன்மை
தந்து வலிகலந்த
சுகத்தை தந்தவனே
உன் எச்சில் பட்டதால்
என் தனங்கள்
புனிதமடைந்தது
உன் நகங்கள் பட்ட
கீறல்கள் கூட என் மேனியில் புதுகவிதையானது
என் சுவாசக்காற்று
உன் நுறையீரலை
நிரப்பி நீ அம்மா என்று
சொல்லும் அந்த ஒற்றை
வார்த்தைகாக
என் பெண் ஜென்மம்
தவம் கிடக்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Dec-17, 9:49 am)
Tanglish : punitham
பார்வை : 611

மேலே