அன்னை

முத்தமிழ் வளர்த்த அன்னையே!.....
அன்பென்னும் ஊற்றில்
குளிக்க வைத்தாய் என்னையே!....
பன்னாட்டு கடந்தாலும் உன்
பாசம் மாறுமோ!....
பல ஞானம் பிறந்தாலும் உன்
அன்பு மாறுமோ!.....
எனக்காக ஏணி ஆனாய்
மேலோங்கி உயர்ந்தேன்
எனக்காக பனித்துளியானையாய்
புல்லாய் சிரித்தேன்.
தேர் சக்கரமாய் தேய்ந்தாய் -தேரில்
என்னை வைத்து ஊர்ந்தாய் !....
பத்து மாதங்கள் தவம் செய்து
பல வலிகளோடு எம்மை ஈன்றெடுத்தாய்!....
பல நாடுகள் சென்றாலும்
பல வளங்கள் பெற்றாலும் -எங்கும்
பார் போற்றுபவள் என்றும் தாயே!....

எழுதியவர் : பெரியகவுண்டர் (4-Dec-17, 4:34 pm)
Tanglish : annai
பார்வை : 704

மேலே