நட்பு

என் செங்குருதி கீழ் சிந்தினாலும்
விழி வழி நீர் வழிந்தோடினாலும்
என் தேகம் தீக்கிரையானாலும்
என் முகம் உருக்குலைந்து போனாலும்
என் உயிர் மெய் விட்டு நீங்கினாலும்
துயரமெனும் ஆழ்கடலிலிருந்து
என்னை நட்பெனும் தோணி மீட்டெழுக்கும்
எனக்கு உயிர் கொடுக்கும்