என் இதயம்
இவ்வுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தியது என் அம்மா
வகுப்பில் "ஆசிரியை தான்" என இரண்டு போட்டு கண்டித்த அம்மா
மின்சார விபத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அம்மா
தாமதமாக வரும் போது அப்பாவின் அடியிலிருந்து காப்பாற்றியது அம்மா
சோதனைகளை சாதனைகளாய் மாற்ற
கற்றுக்கொடுத்தஅம்மா
நட்பை கற்பை போல் பாவித்து நண்பனுடன் பழகு என்றஅம்மா
விதியோடு வாதித்தால் சாதிக்கலாம் என்று சாதித்துக் காட்டிய என் அம்மா
அன்னையாக நீ எனக்கு கிடைத்தது கடவுளின் வரம்
என் வாழ்வை சங்கீதமாக்கிய அன்னைக்கு படைப்பது ஏழு சுவரம்
இப்பொழுது நீ இல்லாவிட்டாலும் உன்
நினைவுகளால் வலிமையுடன் வாழும்
ராரே