கடலின் நிறம் சிவப்பு
இயற்கையே..!
எதற்கு நீ
கடலாய்..
கனலாய்..
புயலாய்..
பூகம்பமாய்..
சினம் கொண்டு சீறுகிறாய்..!
சினம் நீ கொண்டால்
மனித இனம்
வாழ்வதெங்கே ?
எத்தனை கோடி
விசித்திர உயிரினங்களின்
வசிப்பிடமாய் இருக்கிறாய்..
இருந்தும் ஏன்
எங்கள்
இருப்பிடம் புகுந்து
இருப்பதையும் பார்க்கிறாய்..
அலையாய் இருந்தால்
அழகாய் கவிபாடலாம்
பனையாய் உயர்ந்தால்
பழிதான் சுமப்பாய்...
அன்னையும்
அலை கடலும்
ஒன்றெனக் கொண்டோம்...
ஒ.. ! கவிஞர்களே
கடல் பற்றிய
உங்கள்
கவிதைக் காகிதங்களை
கப்பல் செய்து
கண்ணீரில் மூழ்க விடுங்கள்..!
காதலின் நிறமும்
கடலின் நிறமும்
நீலமெனக் கண்டோம் ..!
ஓ ..! ஓவியர்களே
இனி
கடல் வரைய
தூரிகைகளில்
தொட்டுக்க கொள்ளுங்கள்
ரத்தத்தை...!
- வெள்ளூர் ராஜா
( 2005 ம் ஆண்டு தினகரன் - பொங்கல் மலர் போட்டி கவிதையில் முதல் பரிசினை பெற்ற சுனாமி பற்றிய எனது கவிதை. பரிசு பெற்ற விவரம் பெரிதாக அன்றைய தினகரன் நாளிதழில் என் புகை படத்துடன் வெளி வந்தது. தற்செயலாக டைரி புரட்டிய போது கிட்டியது.)