முதல் பார்வை
வழிப்போக்கனாய்
சுற்றிய
என்னை
ஏளனப்பார்வையில்
நோட்டமிட்டாள்;
பிறந்தநாளென
அருகே வந்து
புதிதாய்
என்னுள்
காதலைப் பிரசவித்தாள்;
குறுக்கெழுத்துப்
புதிர்களாய்
குறுஞ்செய்தியால்
குடைக்குள் மழையாய்
என்னை ஈரமாக்கினாள்;
நெற்றிமேல்
சரிந்த முடிக்கற்றையை
இருவிரலால்
கோதுகையில்
கோலங்களைப் பூக்கச்செய்தாள்
என்
மனவாசலில்;
மாதொரு
மாணிக்கமென
மங்கையவளை கண்டேனே;
முதல்ப்பார்வை
மட்டும்
கொண்டென்னனுள்
காதல்
தோட்டம் மலரச் செய்ததாள்!