கிறுக்கிட காரணம் என் காதல் கிறுக்கன்தான்

அடுத்தவரி கவி என்னதான் என்று ஆமோதிக்க தெரியவில்லை
இரு விழியால் இவன் மொத்தமாய் கடத்தி சென்றதால்

பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
நான் கஞ்சம் பார்க்கிறேன் அவன் கரு விழி பார்த்ததும்

கனவோடு கொஞ்சம் காமம் விதைக்கிறான்
இரவோடு இவன் இல்லாதபோதும்

சரியாக இடம் அமைந்தும் சாதிக்கத்தான் மறுக்கிறான்
சிறிதாக என் பெண்மையை சீண்டி தான் பார்க்கிறான்

மறுமுறை தனிமையில் பொறுமையை விரும்ப மாட்டேன்
சீக்கிரமாய் தை பிறக்கும் அதுவரை வேண்டாம் உன் இருவிழி

எழுதியவர் : vanmathi gopal (19-Dec-17, 5:25 pm)
பார்வை : 148

மேலே