மார்கழிப் பூங்காலை
பனிப்படலம் போர்த்திய மார்கழிப் பூங்காலை
கோபுரம் மீதினில்வீ சும்குளிர்ப் பூங்காற்று
கண்ணனின் ஆலயத்தில் பாவையர் பாடல்
மனமேநீ யும்மார் கழி .
மனமேநீ யும்மார் கழித்திங் களானாய்
விரியும் மலருடன் மெல்ல மலர்ந்தாய்
புலராதக் காலைப் பொழுதுடன் நீமகிழ்ந்தாய்
பூங்கதி ரும்வரும்இப் போது .
பூங்கதி ரும்வரும்இப் போதுகீழ் வானத்தில்
புள்ளினங்கள் பாடும் மொழியிலா பூபாளம்
தென்றலும் ஏந்தி வருமேமென் பூவாசம்
வண்டினமும் பாடும்ரா கம் .
---மார்கழி வெண்பாக்கள்